Sunday, February 1, 2009

"எம்மக்களை கொல்வது சீனாவின் டாங்கிகளோ,இந்தியாவின் உளவு விமானங்களோ மட்டுமல்ல வாய்மூடி கிடக்கும் சர்வதேச சமுகத்தின் "மௌனமும்" தான்.எங்கள் பழங்கதைகள் ஒன்றன்படி ஒவ்வுறு நாலும் ஏதேனும் ஒரு வீட்டில் இருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்..எங்கள் சகோதரிகளை குழந்தைகளை விட்டுவிட்டு சொல்லுங்கள் தாங்க முடியவில்லை...அவர்கள் எல்லாம் ஒருநாள் மனமார சிரிபதை பார்போம் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் போராடுவதே"- இது உருகவைக்கும் தமிழ் சினிமாவின் கதை இல்லை-ஒரு இனம் பிறிதொரு இனத்தால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் அவலம் கண்டு பொங்கி எழுதியவனின் கடிதம்.தங்கள் தொப்புள்கொடி ஈழ சொந்தங்கள் அழிவதை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து வரும் சொரணை அற்ற உறவுகளை உணர்சிபடுத்த உயிராயுதம் எடுத்த "முத்துக்குமார்"இன் இறுதி கடிதம். முழுதும் காண www.puthinam.com,www.nakkheeran.in பாருங்கள். சூடும்,சொரணையும் நமக்கு உண்டென்றால்,மன உணர்ச்சி இருந்தால் அவர் எண்ணங்களை நிறைவேற்ற அணிதிரள்வோம்.எரிந்துபோன அவரின் சாம்பலை பூசிக்கொண்டு புறப்படுவோம்-புதிய தமிழினம் படைக்க!ஈழம் காக்கும் தமிழினம் படைக்க!!

No comments:

Post a Comment